Saturday, September 15, 2012

கற்பனைகளுக்கு உருவம் தந்து


என் கற்பனைகளுக்கு உருவம் தந்து
உன் பெயரை சூட்டிக் கொள்கிறேன்.
விரும்பிய படி உனைத் தீட்டிக் கொள்கிறேன்.

அமைதியாக அணுஅணுவாக இரசிக்கும்
உனக்கு சன்மானமாய் பெருமழையாய்
என் அன்பை உன்னுள் பொழிகிறேன்.

என் கனவுகளுக்கு மேடையாகிறாய்.
நான் நடத்தும் நாடகத்தில் உன்னை
பாத்திரமாக்கி உன் வழி என்
எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கிறேன்

உன்னுள் கரைந்து வெளிவருவதால்
உன் சாயங்களைப் பூசிக் கொண்டே
வெளி வந்து விழுகிறது என் எழுத்துக்கள்.

No comments:

Post a Comment