Saturday, September 15, 2012

எதிர்பார்ப்பில்லா உன் பாசத்தில்


இன்னதென்று புரியாத சோகங்கள்
இதயத்தை முழுதாய் நிரப்பி
இருட்டாக்கும் போது உனையே
இருளைப் போக்க அழைக்கிறேன்.
அன்பெனும் விளக்கை நீ ஏற்றி
அரவணைக்கையில், வெளிச்சமாகி
அழகாய் ஒளிர்கிறது உள்ளம்
அன்றலர்ந்த மலர் போல்..

எதிர்பார்ப்பில்லா உன் பாசத்தில்
எதிர்ப்புகளே இல்லாமல் பயணித்து
எனக்கான சிம்மாசனத்தில் அமர்ந்து
எல்லா நொடியும் ஏகாந்தத்தில் மிதக்கிறேன்.

1 comment:

  1. எதிர்பார்ப்பில்லா உன் பாசத்தில்
    எதிர்ப்புகளே இல்லாமல் பயணித்து
    எனக்கான சிம்மாசனத்தில் அமர்ந்து
    எல்லா நொடியும் ஏகாந்தத்தில் மிதக்கிறேன்.


    அருமையான வரிகள்

    ReplyDelete