Saturday, September 15, 2012

காத்திருப்பேன் எனத் தெரிந்துமே


 
காத்திருப்பேன் எனத் தெரிந்துமே
மெளனம் காக்கிறாய் அழுத்தமாய்.
வார்த்தைகளை வெளியே தள்ளி
கருணைக் கொலை செய்கிறேன்
உனக்கான வார்த்தைகள் மட்டும்
உயிருடன் வாழ்ந்து கொல்கிறது.

உன் பாதை தவிர்க்க கால்கள்
எங்கெங்கோ உலா போகின்றன
அங்கேயும் கண்கள் துழாவுவது
உன் பாதச் சுவடிகளையே........

எல்லாமறிந்தும் ஏதுமறியாதது போல்
நாடகமாடுகிறாய். உன் நாடகத்தில்
ஊமை பாத்திரமாக உலா வருகிறேன்.

எல்லாம் உடைத்து உன்னருகில்
ஓடிவரவே மனம் துடித்தாலும்
ஏதோ தடுக்கிறது என்னை....
 
உன் பிரியத்தை அறியும் பரிட்சையில்
விடை தெரியாவிட்டாலும் காத்திருக்கிறேன்
முழுமதிப்பெண்களுடன் உன் வரவுக்காக
 

No comments:

Post a Comment