Saturday, September 15, 2012

மாயம் புரிகிறது உன்னால்


 
உன் புன்னகையின் பிண்ணனியும்
உன் துக்கத்தின் காரணமும்
நானென்ற இரகசியம் அறிந்தே
வினாக்களோடு உலா வருகிறேன்.
எதிர்பாரா சூழ்நிலையில்
எதிர்பார்த்த விடையளித்து
திக்குமுக்காட வைக்கிறாய்

திணறி நான் நிற்கையிலே
உதிர்த்துவிட்டு செல்கிறாய்
மர்மப் புன்னகையை
எதுவுமே நடவாதது போல்

நீ கண்ணங்களில் ஏற்றிய
சிவப்பு நிறத்தை மறைக்க
தடுமாறுகையில் மேலும்
சிவப்பேற்றுகிறாய் ஒரு
ஒற்றை முத்தத்தில்....
விடைதெரிந்த வினாக்களும்
வாழ்வை சுவாரசியமாக்கும்
மாயம் புரிகிறது உன்னால்

No comments:

Post a Comment