Saturday, September 15, 2012

சிறைப்பிடித்து


நின் கண்களெனும் அம்புகள் பட்டு
கண்ணங்களில் சிவப்புபூக்கள் பூத்து
செவ்வானமாய் காட்சியளிக்கிறது.

வண்டாக தேனை மிச்சமின்றி பருகி
பரவசத்தை கொட்டுகிறாய் என்னுள்.
தேனிருந்த இடத்தை அன்பால்
இட்டு நிரப்புகிறாய் நிறைவாக.

அடர்த்தி அதிகமாகியதில் தள்ளாடி
சாய்கிறேன் உன் தோள்களிலே.
கைகளுக்குள் சிறைப்பிடித்து சிறகுகளை
விரித்து பறக்க வைக்கிறாய் வானில்.

No comments:

Post a Comment