Friday, August 30, 2013

நினைவுகள் சுமந்தபடி


கரையோரத்தில் கால்கள் நனைத்தபடி
பேரழைகளைலில் மிதக்கும் நிலவினை
மெளனமாய் இரசிக்கிறேன்.........

நீந்தும் மீன்களின் நீர்த்தெளிப்புகள் ...
நலம்விசாரிக்க உள்ளுக்குள் பூக்கும்
அணுக்களின் எதிரொலியாய்
விரிகின்றன இதழ்கள் மெலிதாக.......

இருட்டின் ஆக்ரமிப்பு தெளிவாக தெரிய
இரவலாய் வாங்கிய நிலவின் வெளிச்சம்
இல்லாமல் போகுமுன் வீடுசேர புத்தி
எச்சரிக்கை மணி எழுப்ப, அனிச்சையாக
வீடு நோக்கி நகர்கின்றன கால்கள்
நினைவாக சில ஈர மணல்களை சுமந்தபடி........

No comments:

Post a Comment