Friday, August 30, 2013

தமிழ்க்குடில் அறக்கட்டளை



 
எல்லோர் மனதிலும் நமது சமுதாயத்திற்காக நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைந்து இருக்கும். எப்படி என்பது தான் கேள்விக்குறியாக இருக்கும்.நம்மிடம் இருக்கும் சிறு தொகையை வைத்து என்ன சாதித்து விட முடியும் என்ற எண்ணமும் தலைதூக்கும் ஆனால் செய்ய வேண்டும் என்ற வேட்கை உயிரோடு இருக்கும். சிறு துளிகள் தான் கடலாகும் என்பதை உறுதிசெய்யும் வகையில் நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்தது தான் தமிழ்க்குடில் அறக்கட்டளை.

தமிழ்க்குடில் அறக்கட்டளை மே மாதம் 21ந்தேதி 2012 அன்று பதிவு செய்யப்பட்டது..

ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே தமிழ்க்குடிலில் முதலாமாண்டு விழாவின் போது சுமார் 25 மாணவர்களுக்கு தேவையான பொருள்களை திரு,சிலம்பொலி செல்லப்பா அவர்களின் திருக்கரங்களால் மேடையிலேயே வழங்கப்பட்டது.

மேலும் சில மாதங்களில் சுமார் 50 குழந்தைகளுக்கு படிப்பிற்கு தேவையான பொருட்களை நமது அறக்கட்டளை வழங்கியுள்ளது.

செப்டம்பார் மாதம் 2012இல், உண்ணாமலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணிற்கு செமஸ்டர் கட்டணமாக ரூ.12000/- வழங்கியுள்ளது.

டிசம்பர் மாதம் திருப்பூரில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் 10வது,12 வதுபடிக்கும் தந்தையிழந்த குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டது.

மேலும் மரத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கி அவர்கள் மூலமாக சுமார் 90 மரக்கன்றுகள் நட்டு அதை பாதுக்காக்கும் பொறுப்பையும் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.

700 மாணவர்கள் படிக்கும் திருப்பூரில் உள்ள பிச்சம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒலிபெருக்கி செட் வாங்கி குடுக்கப்பட்டுள்ளது
அய்யன்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 50 ஆங்கில அகராதி வழங்கப்பட்ட்து.

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நடப்பு செயலாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய ஒரு நூலகம் கட்டப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திறப்புவிழா நடைபெறவிருக்கிறது.

நூல்கள் வழங்க விருப்பம் உடையவர்கள் அரிய வகைத் தமிழ் நூல்கள் (சங்க இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஓலைச்சுவடி, ஆய்வுக்கட்டுரைகள் போன்ற நூல்கள்) வழங்கலாம்.

இந்த நூலப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவர்கள் தொடர்ப்பு கொண்டால் மேலும் அதுபற்றிய விவரங்களை தருகிறேன்

No comments:

Post a Comment