Friday, August 30, 2013

நினைவினில் நீ


கண்களில் காவியமெழுதி
சிந்தையைச் சிறைப்பிடித்து
கவிதையாக உன் நினைவுகளை
நிரப்பி வைத்தாய் நிறைகுடமாக...
...
மூடிய இமைகளுக்குள் காட்சியாக
உன் பிம்பத்தை விரிய வைத்தாய்.

முன்னம் தந்த முத்தமெல்லாம்
திகட்டாத தேனாக நெஞ்சினில்
இனிதான கானம் பாட

மஞ்சத்தில் கண்விழித்து
நெஞ்சத்தில் உனைநிறுத்தி
பஞ்சத்தில் பசியாறும்
பாமரனாக மிச்சமில்லாமல்
நினைவுகளை அசைபோட்டு
நித்திரைக்கு இரையாகிறது
நிர்மலமான மனம்

No comments:

Post a Comment