Friday, August 30, 2013

காணவில்லை என் கனவை




 இமைகள் மூடியதும் கதவு தட்டுகிறது
இமைக்கதவை திறக்கையிலே காணாமல் போகிறது.
அழைப்பு மணியை அடித்து விட்டு ஓடும்...
பக்கத்துவீட்டு சிறுமி போல

புத்தி அடுக்களிலும் துழாவ எத்தனிக்கையில்
தடையமே விட்டுவைக்காத அதன் அறிவு புரிகிறது.

மீண்டும் தட்டுமோ என்ற ஆசையில் இமைக்கதவை மூடுகிறேன்.
விழிகளின் அசைவில் என் விழிப்பை உணர்ந்ததனால்
கைக்கெட்டா தூரத்திக்கு பறந்தே விட்டது.

துளாவித் தருமாறு பிரபஞ்சத்திடம் மனு போட்டேன்.
அதுவோ தினம் ஒரு கனவை எனக்கனுப்பி அடையாளம் கேட்கிறது.

என்றேனும் ஒருநாள் கதவு தட்டும் என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு முறையும் இமை மூடுகிறேன் ஆசையோடு.

No comments:

Post a Comment