Friday, August 30, 2013

யாருமில்லா புல்லாக


சுழற்றியடிக்கும் சூறாவளியில்
சிக்கித்தவிக்கும் சிறுஎறும்பாக
எண்ணங்களின் கொந்தளிப்பில்
காணாமல் போகிறேன்........

பற்றிடவும்,பாதுகாத்திடவும்
பாரினில் யாருமின்றி
தனிமையில் திரிகின்றேன்.

அலை அலையாக எண்ணங்கள்
மனக்கடலை ஆட்சிசெய்ய
புரியாதது புரிந்தும்
புரிந்தது புரியாததுமாய்
யாருமில்லா புல்லாக
புவியினில் கிடக்கின்றேன்.

No comments:

Post a Comment