Friday, August 30, 2013

பாரமறியா மனது




 நீண்ட நேர நடையில் துவண்ட கால்கள் மெதுவாக பயணம் தொடர, சுழலும் கண்களில் தெண்பட்டார் ஒரு சீன மூதாட்டி கைகளில் தூக்க முடியா சுமையுடன்..... முகத்தில் தெரிந்த கோடுகள் அவரின் அனுபவத்தை பறைசாற்றின. வளைந்த முதுகு பாரங்களை ரொம்ப நாள் தூக்கியதன் சாட்சியாக தெரிந்தது.

மெதுவாக அவர் பாதங்களை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தார். இந்த வயதில் நாம் எப்படி இருப்போம் என்ற சிந்தனை மனதில் மின்னலென மின்...
னிவிட்டு சென்றது. உயிரோடே இருக்க மாட்டாய் என்று புத்தி இடியாய் உரைத்தது. அவர் அருகாமையை நெருங்க ஆரம்பித்தவுடன் அந்த சுமைகளை வாங்கிக் கொள்ள மனம் துடித்தாலும் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் பேசாமல் மெதுவாக நகர்ந்தது கால்கள்.

சுமைகளை கீழறிக்கி சிறிது ஓய்வுக்கு பின்னே தூக்க முனைந்தார். இதற்கு மேல் பொறுக்க இயவில்லை.

“நான் எடுத்து வந்து தரட்டுமா” எனக் கேட்டேன்.

என் குரல் எனக்கே கேட்கவில்லை.

சிநேகமாக புன்னகைத்து “என்ன” என்றார்.

“பாரம் அதிகமாக இருக்கிறதே, நான் தூக்கி வரட்டுமா” என்றேன்.

“தினமும் தூக்குகிறேன்.பாரமாக தெரியவில்லை” என்றார்.

கண்கள் விரிய அவரைப் பார்த்தேன். அவர் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்

பழகிப் போனால் பாரத்தின் சுமை உரைக்காதோ மனதிற்கு.

No comments:

Post a Comment