Saturday, September 15, 2012

விடை தெரியா கேள்விகளுடனே


விடை தெரியா கேள்விகளுடனே
விடை பெறுகிறேன் உன்னிடம்.

காலங்கள் நமது நினைவுகளை
மங்கிப் போன புகைப்படமாக்கினாலும்
கலங்கிப் போன குளத்தில் அரைகுறையாக
தெரியும் பிம்பம் போல் நமக்குள் நாமிருப்போம்

நினைவு அடுக்குகளில் நம்மை பிரிய வைத்த
பிரச்சனைகள் அயுள் இழக்கலாம் ஒரு நாள்.

அன்று தெளிந்த குளமாய் மனம் மாறி
அருகாமைக்காய் ஏங்க வைக்கும் போது
பூமி நோக்கி ஓடிவரும் மழைபோல் வந்து
துளியாய் கடலில் கலப்பேன் என்ற நம்பிக்கையுடன்
விடைபெறுகிறேன் சொல்லாமலே

1 comment:

  1. சொல்லாமலே விடைபெறும் கவிதை வரிகள் மனதுக்குள் விடைபெறாமல் நின்று விட்டது. அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete