Tuesday, March 13, 2012

கவிஞனின் காதல் - பாகம்1


நிலா முற்றத்திலே
பெளர்ணமி ஒளியினிலே
தன் காதலியை
கவிஞன் மொழியால்
அலங்கரிக்க
அழகிய பாசுரங்கள்
உயிர் பெற்றன.

பிரபஞ்சமே அமைதியாய்
இலயித்திருக்க........
தென்றலும் அதற்கு
இசையமைக்க........
தேவர்களும் நட்சத்திரங்களாய்
எட்டிப் பார்த்து இரசிக்கிறார்கள்.

கவிஞனின் காதலில்
உருகும் பனிக்கட்டியாய்
மயங்கிய உயிரிணங்கள்
அத்துணையும் காதல் செய்தன.

பனித்துளி ஆழ்ந்து விழ
இதழ் விரிக்கும் மெல்கிய மொட்டாய்
அவனின் அடர்த்தியான காதல் கவியில்
சொக்கிய நிலவு பிரகாசித்து
உலகையே இரம்மியமாக்கியது.

நிலவின் ஒளி முகத்தில் தெறிக்க
அழகோவியமாய் காதலி மிளிர
மதிமயங்கிய கவிஞன்
காதலியே நிலவைவிட
அழகிற்சிறந்தவள் என கவிபாடினான்.

கோபமுற்ற நிலவும்
தன் காதலனாம் கதிரவனிடம் கூற
செங்கதிர்களுடன் கோபமாய் சூரியனும் வர,
பயந்து போன இலைகளின் வேர்வைத்துளிகளாய்
பனித்துளிகள் எட்டிப்பார்த்தன.


No comments:

Post a Comment