ஒரு துளியாய் கடலில்
வீழ்ந்திருந்தால் கரைந்து காணாமல் போயிருப்பேன்.
உன் அன்பெனும் சிப்பிக்குள்
விழுந்ததால் விலைமதிப்பில்லா
முத்தாகிறேன்.
சூரிய புயலாய் உன் பேரன்பு
எனைத்தாக்க மின்சாதனமாய் உணர்விழந்து உருகிப் போகிறேன்.
கரும்புக் காட்டில் புகுந்த யானையாய்
என் சிந்தைக்குள் நுழைந்துமனதை ஆள்கிறாய்.
ஒவ்வொரு நொடியும்
உனையே நினைப்பதால்எல்லாம் காட்சிப் பிழையாக
மனம் பேதலிக்கிறேன்.
என் காதலை மொழிபெயர்க்க
தெரியாமல் விழிபிதுங்க,எரிமலையாய் வெடித்து
குழம்பாய் வடிக்கிறது.
என் மொழியும் வஞ்சிக்கிறது
தொண்டையில் சிக்கிக் கொண்டு,உன்னருகில் இருக்கும் போது.
முழுதாய் காதலை சொல்லவந்து,
ஒவ்வொரு முறையும் திரும்புகிறேன்தோல்வியுற்ற வீரனாய்.
புரிந்து கொள்வாயா என் அன்பே
உணர்ச்சிகளைச் சொல்லத்தெரியாத ஊமை போல்
நான் படும் பாட்டை.
வழியும் கண்ணீரை ஆராய்ந்து
பார்த்தால் என் அணுக்களின்காதலை புரிந்துவிடுமே.......
சொல்லித்தான் புரிய வேண்டுமா
கதிரவனின் காதலுக்காய்மலராய் மலரும்
செடியின் காதலை..........
No comments:
Post a Comment