Monday, March 19, 2012

விலகிச் செல்கிறேன் சிலகாலம்

பட்டுக் கம்பளமாய் உன் பாதையில்
படற நினைத்து கூரிய கற்களான
மாயம் அறியாமலே மருகி
விலகிச் செல்கிறேன் சிலகாலம்

மனமகிழ்ந்து மகிழ்ச்சிகடலில்
மூழ்கடிப்பதாய் நினைத்து
அக்னிக் குழம்பில் தள்ளியதால்
தள்ளாடுகிற மனதோடு
விலகிச் செல்கிறேன் சிலகாலம்

உனக்கு அமுதமாய் இருந்து
உயிர் தரயெண்ணி அளவுமிஞ்சியதால்
விஷமாகி உயிர்பறித்த வினையால்
விக்கித்துப் போன உணர்வோடு
விலகிச் செல்கிறேன் சிலகாலம்.

உன் இலட்சிய வாழ்வில்
வழிகாட்டியாய் வாழ நினைத்து
தடைக்கல்லானதின் தடயம் தெரிய
விலகிச் செல்கிறேன் சிலகாலம்.

உள்ளங்கை நெல்லிக்கனியென
உன் உள்ளம் புரிந்தாலும்
உன் நலம் நாடியே, நினைவுகளை
நெஞ்சுக் கூட்டில் சுமந்தபடி
விலகிச் செல்கிறேன் சிலகாலம்.

குடத்திலிட்ட விளக்காய்
நீ இருந்தாலும்
குன்றிலிட்ட விளக்காவதற்காய்
பாதையில்லுள்ள முட்களை
அகற்றி மலர்களைத் தூவி
விலகிச் செல்கிறேன் சிலகாலம்
உன்முன்னே உனக்காக.

No comments:

Post a Comment