ஆறறிவைக் கொண்டு
நிலையில்லாததை நிலையானதாக்க,முடிவுகள் போராளியை பாதிக்காத,
அதிசய போராட்டம் நடக்குமிடம்.
புரியாத மொழி பேசும்
ஏலியன்களாக மருத்துவர்களும்,மொழிபெயர்ப்பாளராக
செவிலியர்களும் உலா வருமிடம்.
பெற்றோர்கள் கண்ணீர் வடிக்க
நெஞ்சில் நெருஞ்சி முள் இடறுமிடம்.
உணர வைக்கும் சன்னதி.
ஆத்திகன் நாத்திகனாகவும்
நாத்திகன் ஆத்திகனாகவும்மாறும் மாயாஜாலமும் நடந்தேரும்.
அழகாய் மனிதம் பூத்து
பிரபஞ்சத்தை பிரமிக்க வைக்குமிடம்.மனிதர்களின் போதிமரம்
No comments:
Post a Comment