Thursday, March 1, 2012

மரணித்த மனிதம்



பாசத்திற்காய் இல்லாமல்
பணத்திற்காய் ஓடுகையில்
முதல் சாவு மணி மனிதத்திற்கு


நேரமின்மை எனச்சொல்லி
உறவுகளை காப்பகத்தில்
சேர்க்கையிலே மற்றுமொரு
சாவு மணி மனிதத்திற்கு
 
சுயநலத்துக்காக
தர்மம் கொல்ல
முழுவதும் மரணித்தது மனிதம்

 ஓடிக் களைத்த பின்
மனிதத்தை தேடினால்
அதன் கல்லறையில்
புதர் மண்டிக்கிடக்கிறது


இழந்த மனிதத்தை
மீட்க வழிதெரியாமல
விழி பிதுங்குகிறது மானுடம்




No comments:

Post a Comment