Wednesday, March 28, 2012

நானாக........



பாத்திரத்திற்கு ஏற்ப உருமாறும்
திரவம் போல இல்லாமல்
நான் நானாக இருப்பது
உன்னிடத்தில் மட்டுமே....

புவியீர்ப்பு விசையாகி
என் எண்ணங்களை
கோள்கலாய் உனைச்
சுற்ற வைக்கிறாய்.

பொருளில்லா இடத்தில்
காற்று புகுவது போல்
நீயில்லா இடத்தில்
வெறுமை சூழ்கிறது.
 
தன்முனைப்பு தற்கொலை செய்ய
முகத்திரை முற்றிலும் கிழிய
இயல்புகளை இழக்காமல்
மலர்கிறேன் உன் தோட்டத்தில்.


No comments:

Post a Comment