Sunday, March 18, 2012

கடைசி ஆசை


குற்றம் என்னதென்றே அறியாமல்
தண்டனைகளை அனுபவிக்கும்
ஓர் அபலைத் தாயின்
கடைசி ஆசை.

அலைகடலென பொங்கும்
மகனின் மேல கொண்ட
பாசத்தால் பகுத்தறியாமல்,
கணவனின் கருத்தையும்
மதியாமல் உயிலெழுதியதால்
அசோகவன் சீதையானேன்.

மருமகளின் குறைகள் சொன்னதால்
மகனும் ஐ.நா சபையாய் மெளனமாக,
கூட்டணியமைத்து வெற்றிபெற்ற
ராஜ்பாக்‌ஷேவாய் மருமகளாக,
வீட்டிலேயே அகதியானேன்.

நாடுகடத்தைபட்டேன்
முதியோர் இல்லத்திற்கு.
மகனைச் சுற்றியே
மனமும் சுழல்வதால்
தனித்தீவானேன் இங்கும்.

வாரமொரு முறையாய்
இருந்த மகனின் தரிசனமும்
தேய்பிறையாகி.............
இல்லாமலே போய்விட்டது.

இத்தனை நாட்கள்
அவனைச் சுற்றியே
என் உலகமானதால்,
எங்கும் அவனுருவமே
நிறைய, மகனின் பெயர்தவிர
எல்லாம் மறந்து போக,
பைத்தியம் என்ற பட்டப்பெயரோடு
ஓடியது வாழ்க்கை.

இன்று மரணப்படுக்கையில்
கடைசி மூச்சை பிடித்தபடி
மகனின் முகமே எனது
கடைசி காட்சியாய வேண்டி
காத்திருக்கும் எனதாசை நிறைவேறுமா?????


No comments:

Post a Comment