பனித்துளியின் வருகையைப் பார்த்த
மொட்டும் இதழ் விரித்து எட்டிப் பார்க்கவண்டுகள் பறந்து வந்து பூவுக்குள் ஒளிந்தது.
இதுஏதுமறியா கவிஞனோ தின்று வளர்வதே
குறிக்கோளாய் கொண்ட புழுவைப்போலமூழ்கியிருந்தான் காதலில்.
கவிஞனின் காதலின் புனிதத்தையுணர்ந்த
கதிரவன் அவனை ஆரத்தழுவஇளம் வெய்யிலை அனுப்பினார்.
ஆதவனின் செயலால் அகமகிழ்ந்த
பறவைகள் சந்தோஷ கீதம் பாடிசிறகை விரித்து வானத்தில் பறந்தன.
கதிரவனின் மனமாற்றத்தைப்
கண்ட நிலவோ நிலமையறியாமல்
அலைகளாய் தனது கோபத்தை
வெளிப்படுத்தும் கடலைப்போல
கோப அலைகள் எழுப்பி
ஊடல் கொண்டது.
ஊடலின் காரணமாய் நிலவும்
பசலை நோய் கொண்டபெண்ணைப் போல
உடல் மெலிந்தது.
தேய்பிறையில் உலகமே
சோககீதம் இசைத்தது.
No comments:
Post a Comment