கடலின் வர்ணத்தை போல
இல்லாததை இருப்பதாய்நினைத்து நித்தமும்
கனவில் மிதக்கும்
இதுவல்லவே நான்
மழைமேகமாய் அன்பை
பொழியயெண்ணிஅடைமழையாய்
இடியுடன் பெய்து
வெறுப்புக்கு ஆளாகும்
இதுவல்லவே நான்
கல்லைக் கட்டிக் கொண்டு
பறக்க நினைக்கும் பறவைபோல்தடைகளை வெல்லாமல்
வெற்றியைத் தேடும்
இதுவல்லவே நான்
காற்றின் போக்கிற்கு அசையும்
சிறு சிறகு போல்சுயம் தொலைத்து வாழும்
இதுவல்லவே நான்
முட்களை நீக்கி
மலரை இரசிக்காமல்பூதக் கண்ணாடி கொண்டு
முட்களை பார்க்கும்
இதுவல்லவே நான்
அழகான இசையாகயெண்ணி
எங்கேயோ இலயம் தப்பஅபஸ்வரமாய் ஒலிக்கும்
இதுவல்லவே நான்
சிலந்திவலையாய்
சூழ்நிலைகள் பிண்ணபோராடாமல் இரையாகும்
இதுவல்லவே நான்
எங்கே தொலைத்தேன்
என் இயல்புகளைமீட்டெடுக்கும் முனைப்போடு
தொலைத்த இடம் தேடி
வெறுமையின் துணையோடு
ஆரம்பக்கிறேன் பயணத்தை.
No comments:
Post a Comment