Sunday, March 18, 2012

உன்னாலே

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடுவது போல்
உன்னால் நானும்
கவி படைக்கும் பிரம்மனாகிறேன்.

மரணப்படுக்கையில் நானிருக்க
அமுதமாய் வந்து
மீட்டெடுக்கிறாய் என்னை.

நீயும் நானும் கூட
இரட்டைக்கிளவிதான்
தனித்து செயல்பட முடியாததால்.

பூஜ்யமாய் நானிருக்க
எண்களாய் முன்நின்று
மதிப்பு கூட்டுகிறாய்.

”தானே” புயலே வந்தாலும்
தாங்கும் விழுதாய் நீயிருக்க
தயக்கமே இல்லாமல்
தாண்டுகிறேன் தடைகளை.

என் எண்ணங்களை பட்டைதீட்டும்
துரோணராய் நீ இருப்பதால்,
கதிரின் ஒளியை உள்வாங்கி
வைரமாய் ஜொலிக்கிறேன்.

தடாகத்தில் தனிதெழுந்து
தாமரையில் விழுந்த
ஓர் துளியாய் உன்னுள்
வீழ்ந்ததால் தனித்தன்மை பெற்று
திகழ்கின்றேன் இப்புவியினிலே.

No comments:

Post a Comment