ஞாயிறுக்கும் திங்களுக்குமான
ஊடலில் உலகமே பரிதவிக்க
ஆதவனுக்காய் நிலவிடம்
மும்மூர்த்திகளும் தூது சென்றனர்.
பற்ற வைத்த விறகாய் இருந்த
சினமும் தனிய, நிலவும்
தன் காதலனை நாடி செல்ல
அமாவாசையானது.
நிலவினைக் காணாது
அதன் ஒருதலைக்
காதலனான கடலும்
சேயைக் காணாது
துடிக்கும் தாய் போல
பெரும் ஓசையெலுப்பி
சோகப் பெருமூச்சுவிட,
கரைகளின் காதல் கீதங்கள்
ஆறுதல் மொழிகளானது
கவிஞனோ காதல் கடலினில்
முத்தெடுத்துக் கொண்டிருந்தான்
தன்நிலை மறந்து.
கவிஞனின் காதலால்
பிரபஞ்சமே இயங்குவதால்
கடைசிமூச்சு வரை
காதலித்துக் கொண்டே இரு
கவிஞனே......................
No comments:
Post a Comment