Wednesday, March 7, 2012

பணம்



வெள்ளைத் தாளாய்
அனாதையாய்
இருந்தயென்னை
சில எண்களை அச்சிட்டு
பணம் என பெயர்சூட்டி
தத்தெடுத்தனர் பலபேர்.

எனை வைத்துக் கொண்டே
பொய்யுரைத்தனர் இல்லையென
அடிமையாய் வைத்தெனை
ஆட்டிப்படைத்தனர் உலகத்தை.

 எனை ஏக்கமாய் நோக்கிய
மக்களின் கண்ணீர் துடைக்க
முயலுகையில் கைதுசெய்து
சிறையிலிட்டனர்.

மனிதர்களின் தவறுக்கு
எனக்கு தண்டனை
கறுப்பு பணமென.

துணிந்துவிட்டேன் தூக்கிலிட
சேர்ந்துவிட்டோம் கூட்டமாக
துரத்திவிட்டோம்
அவர்கள் நிம்மதியை

இனி நாங்களே
அவர்கள்
எஜமானர்கள்.

No comments:

Post a Comment