Sunday, September 1, 2013

ஒற்றை முத்தம்



விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க
ஒற்றை முத்தம் போதுமென்ற இரகசியம்
அறியாமல் மன்றாடுகிறாய் மணிக்கனக்காக .

நீ வீசிய சமாதான வார்த்தைகளை
மெளனமாக தின்று செரிக்கரேன்,
புரியாத நிலை பார்த்து பரிதாபப்பட்டு.

புரியவைக்க யத்தனிக்கையில்
புரியாது விழிக்கும் உன்விழி
பார்த்து கோபக் பந்தை வீசுகிறது இதயம்

கத்தி ஆர்ப்பாட்டங்கள் முடிந்து
சோர்ந்து போய் அபலையாக
அடைக்கலமாகிறாய் தலையணைக்குள்

புரண்டு படுக்கும் என் கைகளுக்குள்
உன் விழியின் ஈரங்கள் முத்தமிட,
கோபங்கள் எல்லாம காணாமல் ஓட,

ஒற்றை முத்தம் நான் தந்து
முடித்துவைக்கிறேன்  சண்டைகளென
நாம் நினைத்த அன்பு பரிமாற்றத்தை

No comments:

Post a Comment