Sunday, September 1, 2013

உறுத்தும் கனவு


நீண்ட இரவில்
நெடும் கனவில்
எண்ணங்களின் ஊர்வலம்
திகைக்க வைக்கிறது புத்தியை

பாதிக்காதென இறுமாந்திருந்த
சூழல்கள் அடிமனதில்
ஏற்படுத்திய வடுக்கள்
காட்சிகளாய் விரிய
பதைத்து விழிக்கிறது மனம்.

தொண்டையில் சிக்கிய முள்ளாய்
உறுத்தும் கனவினை
உருத்தெறியாமல்
அழிக்க முடியாமல்
தடுமாறும் மனதிற்கு
கடிவாளம் தேடும்
புத்தியை நையாண்டி
செய்கிறது காலம்

No comments:

Post a Comment