Sunday, September 1, 2013

உனக்கான என் தவம்


உனக்கான என் தவம்
வரங்களே கோராமல்.
உள்ளுக்குள் பொங்குகின்ற
அன்பினை அணைபோட்டு
மெழுகாக உருகுகின்றேன்....

ஜோடிப்புறாவில் ஒன்றுமட்டும்
சிறகுவிரிக்க, அப்பிக்கொள்ளும்
சோகம்தனை அப்படியே
விழுங்கி விட்டேன்
எனக்காக உன் பயணமென்பதால்.

நினைவுகளை அசைபோட்டே
நிசத்திற்கு உயிரூட்டுகிறேன்.
கால கடிகாரத்தை நிறுத்திவிட்டே
சென்றுவிட்டாய் முழுவதுமாய்.

படிகளிலே தஞ்சமாகிறேன்.
கேள்விகளே கேட்காமல்
புதைத்து கொள்கிறது என்
உணர்ச்சிகளை அதனுள்ளே.

எழுத்துக்கள் வசப்படாததால்
என்னுள்ளேயே கரைக்கின்றேன்
உனக்கான உணர்வுகளை
புரிந்து கொள்வாயென்றே............

No comments:

Post a Comment