Wednesday, September 18, 2013

வெ.இறையன்புவின் சாகாவரம்



எழுத்துக்களால் கரைந்து போக வைக்க முடியுமா??

ஓர் நிமிடம் நம்மை மறக்க வைத்து அசரவைக்கமுடியுமா????

10 பக்கங்களுக்கு மேல் நகரவிடாமல் அசையாது...
கட்டிப்போட முடியுமா????

ஐயோ என்று மூலையில் உட்கார வைக்கமுடியுமா????

உறங்கும் உணர்வுகளை தட்டியெழுப்பி கதற வைக்க முடியுமா????

நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து வந்த போதே இதை கடைசியாக படிக்க வேண்டும் என்று மனதின் மூலையில் ஒலித்த குரலை தடுக்க இயலாது, எல்லா புத்தகங்களையும் படித்த பிறகு கையில் எடுத்தது தான்

வெ.இறையன்பு எழுதிய சாகாவரம்

பத்து பக்கம் படித்துவிட்டு மேலே படிக்க முடியாமல் மனம் முரண்டுபிடிக்க மூடிவைத்த பிறகு மெதுவாய் அசைபோட ஆரம்பித்தது ஒவ்வொரு வரிகளையும் அன்று முழுவதும்.

இன்று மீண்டும் கையில் எடுக்க பாதி கூட தாண்ட இயலவில்லை. நண்பனின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பை படித்து முடித்ததும் அசை போட அமர்ந்துவிட்டது மனசு.


இத்தனை பாதிப்பை என்னுள் எழுப்பிய இந்த புத்தகத்தை கண்கள் விரிய பார்த்தபடி எழுதியவரை வியந்து பாராட்டியபடி நாளையாவது முழுதாக படிக்க வேண்டுமென்று படித்த பக்கத்தை அடையாளமிட்டு மூடிவைத்த பின்னும் நிழலாக தொடர்கிறது “சாகாவரம்”

No comments:

Post a Comment