பெரிய பள்ளங்களை
அடைத்த பிறகும்
மெல்லிய இடைவெளி
உயிர்ப்போடு இருக்கிறது
கண்களுக்கு தெரியாமல்....
உணரும் ஒவ்வொரு
நொடியும் வலியின்
அடர்த்தி கூடுகிறது.
நீர் உறுஞ்சும் வேராய்
அத்துனையும் உறிஞ்சி
எக்காலமாய் சிரிக்கிறது.
அடைப்பதின் சூட்சமம்
கொஞ்சமும் தெரியாமல்
ஆழ்கடல் அமைதி
பூண்கிறது மனம்
No comments:
Post a Comment