Sunday, September 1, 2013

மெல்லிய இடைவெளி


பெரிய பள்ளங்களை
அடைத்த பிறகும்
மெல்லிய இடைவெளி
உயிர்ப்போடு இருக்கிறது
கண்களுக்கு தெரியாமல்....

உணரும் ஒவ்வொரு
நொடியும் வலியின்
அடர்த்தி கூடுகிறது.

நீர் உறுஞ்சும் வேராய்
அத்துனையும் உறிஞ்சி
எக்காலமாய் சிரிக்கிறது.

அடைப்பதின் சூட்சமம்
கொஞ்சமும் தெரியாமல்
ஆழ்கடல் அமைதி
பூண்கிறது மனம்

No comments:

Post a Comment