Sunday, September 1, 2013

மீண்டும் தொடருவோம்


விநாடிகள் கரைய கரைய
வெளிவந்து விழும்
வார்த்தைக் குவியலில்
நமக்கான வார்த்தைகளை
மட்டுமே காணவில்லை....

கோபப் பள்ளத்தாக்கில்
விழாது தடுக்கும்
திராணியற்றே இருக்கிறது
பிரசவித்த அத்துணை
வார்த்தைகளும்........

மெளனக் கூட்டுக்குள்
வெப்பத்தின் தாக்கம்
தாளாமல் தவித்து
உடைத்து பிரசவிக்கிறேன்
ஒற்றை வார்த்தையை

வார்த்தையின் வீரியம்
பேச்சிழக்கச் செய்ய
மெளனக் கடலுக்குள்
நீ எழுப்பும் கோப அலைகள்
குளிர்விக்கின்றன அந்நொடியை

மீண்டும் தொடருவோம்
நமது தேடல்களை
பிறிதொரு வார்த்தைக்
குவியலிருந்து.............

No comments:

Post a Comment