எதைத் தேடுவதென்பதில் தொடங்கி
ஆயிரம் கேள்விகளுக்குள் மூழ்கி
மூச்சுத்திணறி முத்தெடுக்க...
விழைகிறது புதிரான மனம்.
ஒன்றின் தேடலில் இன்னொன்று
முளைக்க, அனுமார் வாலாகா
நீள்கிறது தேடல்கள் கட்டுப்பாடற்று.
தேடியது கிடைக்காமல்,
தேடாதது கைகளில்
இணக்கமாக பொருந்துகையில்,
நமக்கானது இதுவென
புத்தியில் உறைத்தாலும்
தேடலை தொடர்கிறது
மனம் மறுத்தலித்து.....
No comments:
Post a Comment