Sunday, September 1, 2013

வெகு தூரத்தில் இல்லை



மெளனத்தால் கரைத்த
மணித்துளிகள் ஏதோ
உணர்த்த தவறியதால்
கோபத்தின் கருமை
கூடியே உள்ளது....

மெளனம் உடைக்கும்
ஓர் வார்த்தை உளிக்காக
காத்திருக்கும் தருணங்கள்
உணர்ச்சிகளின் கொந்தளிப்பால்
மூழ்கடிக்கிறது உணர்வுகளை.

மெளனக்கூட்டுக்குள்
நத்தையாய் சுருண்டாலும்
உன் வார்த்தைக் குவியலை
நோக்கிய பயணத்திற்கான
நாளும் வெகு தூரத்தில் இல்லை.

No comments:

Post a Comment