Thursday, September 26, 2013

பரிட்சை


தேதி குறிப்பிட்டு வந்த சுனாமி போலவே இந்த பரிட்சைகள் வந்து தினசரி வேலைகளை துவம்சம் செய்துட்டு போகுது.

“அம்மா,ஏதாவது திட்டின அவ்வளவுதான்,சுத்தமா புத்தகத்த தொட மாட்டேன்” என்ற பிளாக்மெயிலுடன் ஆரம்பித்து, வாயே மூடாத பேசி,ஒரு லைன் படிக்கரதுக்குள்ள பாட்டிகிட்ட பேசனும், தம்பி கிட்ட பேசனும் என்று அறிக்கைவிட்டுட்டு அவங்க கிட்ட பெரிய சொற்பொழிவே நடத்திட்டு, நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சு பிபி சங்கீத் ஏத்திவிட...்டா, மாமா அவன் கூட அப்பத்தான் ”உங்க அம்மா இருக்காளே”னு ஒரு கதை ஆரம்பித்து முடிந்தவரை கிண்டல் அடித்து பிபி செமையா ஏத்திவிடுவார்.

ஒருவழியா படிக்க வைச்சுட்டு நிம்மதியா கண்ண மூடினா கனவுல எல்லாம் பரிட்சையா வந்து அலறியடித்து கண்ண முழிச்சா கடிகாரம் 4 மணினு அறிக்கைவிடரது.

அறக்க பறக்க எழுந்து ரிவிசன்க்கு ரெடி பண்ணி 6 மணிக்கு கெஞ்சி கொஞ்சி எழுப்பி கேள்வி கேட்டா......”அச்சச்சோ அம்மா எல்லாம் நியாபகம் இருக்கு, இது மட்டும் மறந்து போச்சு”னு கிண்டல் பண்ணுவான் பாருங்க

அப்ப நமக்கு ஆபந்த்பாந்தவன் மாமா தான். “விடுவிடு நான் பாத்துக்கரேன்”னு கைகுடுக்கரதால இந்த 5 நாள் டென்சன்ல மயக்கம் போடாம தப்பிச்சுட்டேன்.

அக்கடானு எல்லாம் ரெடி பண்ணி 8.30 மணிக்கு பஸ்வேன்ல ஏத்திவிடும் போது “கவலப்படாத நல்லா எழுதிடரேன்” என்று ஆறுதல் சொல்லிட்டு சிரிக்கிறான் எங்க வீட்டு வாண்டு.

நான் பரிட்சை எழுத போகும் போது கூட இத்தன டென்சன் ஆனதில்லை. இன்னையோட பரிட்சை முடிந்ததும். ”ஓ”னு சந்தோசத்துல கத்தனும் போல இருக்கு.

ஆனா ஒன்னுங்க இந்த பரிட்சை என்ற கான்சப்ட் கண்டு பிடிச்சவங்க மட்டும் என் கையில கிடைச்சா சட்டினி தான். நிசமாவே முடியல...இந்த ஒரு வார சுனாமியின் தாக்கம் ஒரு மாசத்திற்கு இருக்கும் போல......

No comments:

Post a Comment