Sunday, September 1, 2013

கண்ணீர் துளிகள்


ஓட்டை வழி கசியும் நீராக
நினைவுகள் மனதினுள் புக,
அழுத்திய பாரத்தில்
பிரசவமாகிறது கண்ணீர் துளிகள்.

வழிந்தோடும் நீரில் கரைந்தோடும்
உணர்வுகளை அணையிட்டு
தேக்காமல் திறந்துவிடுகிறேன் மடையை.

கொட்டிய வேகத்தில் தோன்றிய
பள்ளத்தை நிரப்புவதற்காக
திறந்த இனிதான நினைவலைகள்
பெரியதாக்கியே சென்றன
வேதனை புரியாமல்.

No comments:

Post a Comment