Monday, September 16, 2013

ஓர் நாள்



"என்ன பேசிட்டு இருந்த உன் ஃப்ரெண்ட் கூட அத்தன நேரம்”

“பெருசா ஒன்னுமில்லமா, ட்ரஸ் மேச் இல்லனா, நரைமுடி வர ஆரம்பிச்சிருச்சுனு சொன்னா, வயசான வரும்தானேனு சொல்லிட்டு இருந்தேன் மாமு”

“டை அடிச்சுக்க”...

“அஞ்சு, ஆறு வெள்ளை முடிக்காக டை அடிக்க முடியுமா மாமு, நிறைய வந்ததுனா பார்க்கலாம்”

அவசர அவசரமாக மதிய சாப்பாட்டை தயாரித்து கொண்டே பேசிக்கொண்டு இருந்தேன். உதவரேன் பேர்வழி என்று பையன் ஒரு பக்கம் சமையலைறையை போர்க்களம் ஆக்கிக்கொண்டு இருந்தான்.

“அம்மா இதுல 50 மிலி எண்ணெய் விடுமா”

"குட்டிமா அப்படி அளந்தெல்லாம் ஊத்த முடியாதுடா, அப்படியே எண்ணெய் ஊத்தலாம்டா”

"அச்சோ அம்மா, அப்படி தான் இன்ஸ்டரக்சன் போட்டு இருக்கு”

“அம்முகுட்டி, நானே பண்ணிதரேண்டா, நீ போய் விளையாடுடா”

“மாட்டேன், நான் உனக்கு ஹெல்ப் பண்ணரேன்மா” என்று சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தம் என்ற லஞ்சத்தை குடுத்து காரியத்தை சாதித்தான் பையன்.

மெசரிங் கப் தேடி எடுத்து எண்ணெய் ஊத்தி, சமையலை தொடர்ந்தா.....

“இங்க ஒரு நிமிசம் வந்துட்டு போயேன்” கையில் கத்திரிக்கோலாடு மாமா கத்திக்கொண்டிருந்தார்.

“இப்ப என்னால வரமுடியாதுமா.அங்க இருந்தே என்னனு சொல்லுங்க,பையன்கிட்ட கொடுத்து விடரேன்”

“அட, ஒரு நிமிசம் வந்துட்டு போயேன்”

“அம்மா நீ போ....இதை நான் கிளறிவிடரேன், என்னதானு கேட்டுட்டு வாம்மா” பையன்

“கண்ணு, பத்திரமா கிளறிவிடு,இப்ப வந்துடரேன்”
கோபம் புத்தியை முழுதுமாய் அக்கரமிக்க

“எதுக்குமா கூப்பிட்டீங்க....நீங்க எடுத்துக்க கூடாதா, மூச்சுக்கு முந்நூறு தடவ கூப்பிட வேண்டியது அப்புறம் சமையல் லேட்டா பண்ணரேனு கம்பளய்ன் பண்ண வேண்டியது”

“சரி சரி.....ஒரு நிமிசம் ஆடாம நில்லு, வெள்ள முடி எங்க இருக்கு சொல்லு, ஏதோ 5 , 6 முடினு சொன்னியே கட் பண்ணி விடரேன்”

ஒரு நிமிடம் பேச்சிழந்து நின்றேன்.

“அட, நேரமாச்சு சீக்கிரம் சொல்லு” மாமா

“வேணாம்பா இருந்துட்டு போகட்டும்” காதலுடன் சொன்னேன்

வெள்ளை முடியை தேடி கட் பண்ணி விட்டார்.

“எப்படி தான் உன் தோழிக்கு இந்த வெள்ள முடி மட்டும் கண்ணுல படுதோ போ, இனிமேல் நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு போ”

“தேங்க்ஸ் மாமு” மெதுவாய் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சமையலைறைக்கு சென்றேன்.

அந்த நிமிடம் காதலின் அடர்த்தி இருமடங்காய் கூடி இருந்தது.

காதலை, அக்கறையை வார்த்தைகளால் சொல்வதை விட செயல்களில் காண்பிக்கும் பொழுது நெகிழ்ந்து விடுகிறது மனது.

யார் சொன்னது ஆண்டுகள் பலகடந்த பிறகு குடும்ப வாழ்க்கை அன்பில்லாமல் கடமையாக மட்டுமே இருக்குமென்று.

No comments:

Post a Comment