Sunday, September 1, 2013

இலை உதிர்தலுக்கும்


என் கிளையின் ஒவ்வொரு
இலை உதிர்தலுக்கும்
தன்னையறியாமல்
காரணமாகும் தென்றல் நீ

பூக்கும் பூவிலெல்லாம்
உனக்கான அன்பினை
காவியமாக்கி காத்திருக்கிறேன்.

மென்மையாக தழுவிவிட்டு
செல்கிறாய் அமைதியாக
புன்னகையை உதிர்த்துவிட்டு

அர்த்தங்கள் புரியாவிட்டாலும்
காத்திருக்கிறேன் உனக்காக
என்றேனும் அன்பினால்
மூழ்கடிப்பாய் எனும் நம்பிக்கையில்

No comments:

Post a Comment