Sunday, September 1, 2013

மெளனத்தின் கருமை


மெளனத்தின் அடர்த்தியில்
கரைகிறது சத்தங்கள்
சத்தமேயில்லாமல் முழுவதுமாய்....

நடப்பவையெல்லாம நல்லதாகவே
நடந்தாலும் மகிழ்ச்சியின் இடத்தில்
ஆட்கொள்கிறது வெறுமை முற்றிலுமாய்.

மெளனத்தை வெல்லும்
ஒற்றைச் சொல்லுக்கான
தேடல் தொடங்குகிறது இதயத்தில்....

இதயத்தின் காயங்களில்
கசியும் வலிகளில்
ஒற்றைச்சொல் காணாமல் போக
மெளனத்தின் கருமை
கூடுகிறது மெளனமாய்.....

No comments:

Post a Comment