Wednesday, September 18, 2013

பின்னப்பட்ட வலை


பின்னப்பட்ட வலைகளை
பிரிப்பது எளிதானதன்று
பிரிக்க பிரிக்க புது முடிச்சுகள்
அமுதசுரபியாய் ஜனிக்கின்றன.

தோல்விதான் உறுதியென்பதாலும்,
இரையாவது முடிவென்பதாலும்
போராட்டங்கள் துறந்து
அமைதி கூட்டுக்குள்
முடங்குகிறது மனம்.

நீட்டப்படும் கரங்கள்
மகிழ்ச்சியளித்தாலும்
நம்பிக்கைத்துளிகள்
வற்றிய மனதுக்குள்
பெரும் பாதிப்பை
ஏற்படுத்தவில்லை.

குறுக்கிகொள்ளுங்கள்
உங்கள் கரங்களை
சவத்திற்கு பாலூற்றி
நேர விரையம் செய்யாதீர்கள்

No comments:

Post a Comment