மெளனித்த ஓர் நொடியில்
எண்ணங்களுக்கு விரும்பியபடி
கற்பனை வர்ணங்கள் தீட்டி
சூழ்நிலை சட்டத்தில் சிறையிட்டு
காட்சிக்கு வைத்தனர் கருணையேயில்லாமல்........
அடையாளமே தெரியாத எண்ணத்தை
விடுவிக்க இயலாமல் காட்சியாளனாய்
நிற்கின்றேன் கையாலாகதனத்தால்.......
விமர்சனத் தோட்டாவால் குற்றுயிரானவனை
பரிதாபபார்வைப் பள்ளத்தாக்கில் எறிந்தனர்.
காணாமல் போன எண்ணங்களோடு
காணாமலே போகிறேன் நானும்.......
எண்ணங்களுக்கு விரும்பியபடி
கற்பனை வர்ணங்கள் தீட்டி
சூழ்நிலை சட்டத்தில் சிறையிட்டு
காட்சிக்கு வைத்தனர் கருணையேயில்லாமல்........
அடையாளமே தெரியாத எண்ணத்தை
விடுவிக்க இயலாமல் காட்சியாளனாய்
நிற்கின்றேன் கையாலாகதனத்தால்.......
விமர்சனத் தோட்டாவால் குற்றுயிரானவனை
பரிதாபபார்வைப் பள்ளத்தாக்கில் எறிந்தனர்.
காணாமல் போன எண்ணங்களோடு
காணாமலே போகிறேன் நானும்.......
கவிதை ரொம்ப அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள் தங்கை...