வார்த்தை தேடலில்
மெளனமாக கழிகிறது
மணித்துளிகள்
பொறுக்கியெடுத்த ...
வார்த்தைகள்
போதுமானதாக
இருக்கவில்லை
ஊடலை உடைக்க .......
நீளும் ஊடலுக்கு
நிச்சயமாய்த் தெரியும்
உடையும் நாள்
வெகுதூரத்தில்
இல்லையென
வாழும் நாட்களுக்குள்
வஞ்சம் தீர்த்துக் கொள்கிறது
உயிரினை வாட்டியெடுத்து.
நல்ல கவிதை.
ReplyDelete