Sunday, September 1, 2013

என்னுள் நீ


கலையாக் கனவு நீ
தீராத் தாகம் நீ
கரையா காதல் நீ
பேசாச் சொற்கள் நீ
மறையா வானவில் நீ...
வரப்பில்லா வயலும் நீ
பொய்க்காத வாக்கு நீ
எழுதா விதிகள் நீ
வெறுக்காத கோபம் நீ
வெறுமையில்லா தனிமை நீ
இழப்பேயில்லா சண்டை நீ
அடக்கமில்லா வெட்கம் நீ
புரியாத கணக்கு நீ
கடக்கயியலா கடலும் நீ
இலக்கணம் மீறிய கவிதை நீ
அடங்கா புயலும் நீ
என்னுள் அடங்கிய பதியும் நீ

1 comment:

  1. வணக்கம் அனிதா...

    தங்களை இன்றைய வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
    நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள இணைப்பின் வழியாக சென்று பாருங்கள்...

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4216.html

    நன்றி.

    ReplyDelete