Sunday, September 1, 2013

மறந்துசென்ற புத்தகம்


மகன் மறந்துசென்ற புத்தகத்தை
பார்க்கும் நொடியிலெல்லாம்
காணாமல் பரிதவிக்கும் பிஞ்சு முகம்
கனக்க வைக்கிறது இதயத்தை

மனக்கணக்கில் நொடிகள் கணக்கிட்டு
புத்தி துல்லியமாக நேரங்கள் குறிக்க
வீடு விட்டிறங்க துடிக்கிறது தாயின் மனம்.

கைகள் சாவியைப் பற்றிக்கொள்ள
துரிதமாக இயங்கும் உடம்பை
அழுத்தி வைக்கிறது எச்சரிக்கைமணி
பக்குவப்படும் வாய்ப்பை நினைவூட்டி

மாலையில் ஒரு செல்ல கோபத்துடனும்
சில சிணுங்கல்களோடு புத்தகமில்லாமல்
சமாளித்த அவனின் கதையை கேட்க
புன்முறுவலோடு தயாராகிறது மனம்

No comments:

Post a Comment