நினைவுப் பெட்டகத்தினுள்ளே
உணர்ச்சிகளின் ஊர்வலங்கள்....
உள்புகுந்த ஊர்வலத்தில்
விதவிதமாய் காட்சிகள்.
பசுமையாய் சில நினைவுகள்
நர்த்தனமாடின ஒய்யாரமாய்.
துருப்பிடித்த நினைவுகளோ
முடங்கிக் கிடந்தன ஓரத்தில்.
வெறுத்த நினைவுகளோ
ஒளிந்து கொண்டன கூசிப்போய்.
மறைந்தவரிகளின் நினைவுகளோ
இருப்பைக் காட்டிக்கொண்டன
சோகப் பெருமூச்சை பிரசவித்து.
நிசங்களின் சாயல்களைத்
தொலைத்த நினைவுகளும்
இறைந்து கிடந்தன ஆங்காங்கே.
அடியும் முடியும் காணவியலா
நினைவு ஊர்வலத்திலிருந்து
சட்டென விடுவித்தன
நிஜங்களின் ஆரவாரங்கள்.
No comments:
Post a Comment